Sunday 22 December 2013

பகுத்தறியும் தமிழன்

ஒரு பகுத்தறியும் தமிழனுக்கு வந்த கனவு


நமது முதல்வர் செங்கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது - அதிமுக கட்சியினர்.

ஒரு பகுத்தறிவுள்ள தமிழனின் கனவில் வந்தவை :

பிரதமரின் கட்டளைகள் 

1) பிரதமரை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் யாராவது குரலையோ கையையோ உயர்த்தினால்  அவரிடமிருந்து MP க்கள் பறிக்கப்படுவார்கள்

2) கட்சி உறுப்பினர் யாரும் என் பெயரை உச்சரிக்கக்கூடாது. இது மீட்டிங்களுக்கு வரும் ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி அஸ் அதிகாரிகளுக்கும் பொருந்தும்

3) நான் மன்றத்தில் பேசுவதைத் தயாரிப்பவர்கள் சில பிழைகள் சேர்க்கவேண்டும். 

4) கட்சிக்காரர்கள் மன்றத்துக்குள் கைக்கடிகாரம் அணியக்கூடாது.மேசையைத் தட்டும்போது சப்தம் கேட்பது குறையும்

5) எனக்குத்தெரியாமல் ஊழல் செய்யும் அமைச்சர்கள் உடனே பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கட்சியை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு பணிமாற்றம் உடனே வரும்.

6) ஏல்லா விலையில்லாப் பொருட்களிலும் என் படமும் பெயரும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது உங்கள் கடமை. தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் மடிக்கணினியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்

கனவு கண்டவர்
கோபாலன்

3 comments:

  1. நகைச்சுவையான கனவு. அப்படியே தூங்கி விடாதீர்கள். செங்கோட்டை எக்ஸ்பிரஸுக்கு Return Journey யும் உண்டு.

    உங்கள் பதிவின் தலைப்பில் பகுத்த்றியும் என்பதில் இரண்டு ஒற்றுக்கள். பதிவின் தலைப்பில் உள்ள பிழையை பகுத்த்றியும் > பகுத்தறியும் என்று திருத்தவும்.

    ReplyDelete
  2. நல்ல அரசியல் காமெடி! ஹாஹாஹ் ரொம்பவே ரசித்தோம்!!!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. ஆறுமனமே ஆறு....
    இந்த அம்மா கட்டளைகள் ஆறு.........ஹா..ஹா...

    ReplyDelete