Tuesday, 24 December 2013

கோபாலனுக்கு மீட்டிங்ல பேசணுமாம்

கோபாலன் :  அப்பா. எனக்கு ஒங்களப்போல மீடிங்ல பேசணும்பா, எப்டீன்னு சொல்லுங்கப்பா:

அப்பா :   ஒக்காரு.  மொதல்ல ஒரு சாதி பேர சொல்றேன். பா சாதின்னு வெச்சுக்க. எப்பவும் அவங்களயே கவனிச்சுக்கிட்ரு.

எவனாவது தப்பு பண்ணியோ தப்பு பண்ணாமயோ மாட்டினான்னா இன்னொருத்தன் மாட்றவரக்கும் அவனப் போட்டுத்தாக்கு.



நேத்து மீட்டிங்ல. எல்லா  பா சாதிக்கறங்களும் களவாணிங்க. ஆன எல்லா களவாணிங்களும் பா சாதிக்காறங்க இல்லன்னேன். பயங்கரமா கைதட்னாங்க.

எவ்னாவது எப்பவாவது நம்பளுக்கு எதிரா வாயத்தெறந்தா அவனோட நியூசு போடற் பத்ரிகை எல்லாம் பா சாதிக்காறங்க நடத்ரான். . எங்களுக்கு எதிரா சதி பண்ரான் அப்டீன்னு மீடிங்ல பேச ஆரம்பிச்ரு.

எவனோ ஒரு பா சாதிக் காரன் ஆசிரியர் தொழிலில்ல மட்டும் இட ஒதுக்கீடு வரக் கூடாதுன்னு சொல்லிக் கிட்ருந்தான். இவளவு பேசற ஆளுக்தான் ரெண்டாயிரம் வருசமா எங்கள்த் தாழ்த்திவெச்சுருக்கான் அப்டீன்னு நேத்து மீட்டிங்ல எடுத்து விட்டேன்.. கேட்டு அசந்துருப்ப்பான்.

நெத்து நம்ம தலைவரு ப்ரதமரை சுத்தி இருக்கர பா சாதிகாரந்தான் நாட்டக் கெடுத்துக்கிட்ருக்கான் அப்டீன்னாரு. இதய்ல்லாம் கவனிச்சு வெச்சுக்க. அடுத்த் நாள் மீட்டிங்ல பேச உதவும்.


கோபாலன் :  அப்பா செம.    ஆனா இன்னக்கி இவங்கள்த்திட்றவன் நாளக்கு நம்மள ஏன் திட்டமாட்டான் அப்டீன்னு எவனாவது யொசிக்க மாட்டானா.

அப்பா :   அவ்ளவு புத்தி நம்ம ஊர் சனங்களுக்கு இருந்தா இவ்ளவு நாள் எங்களால குப்ப கொட்டிருக்க முடியுமா.

No comments:

Post a Comment